Posts

Showing posts from January, 2021

யானை ஆதி மனிதனின் முதல் காதல்

யானை எனக்கு‌ மிகவும் பிடித்த விலங்கு. நான் சிறுவயதில் இருந்தே குண்டான உடல்வாகு கொண்ட பெண். பப்ளிமாஸ், பிந்துகோஷ் குட்டியானை‌ போன்ற கேலிகளை கடந்து வந்துருக்கின்றேன். அதனாலோ என்னவோ எனக்கு சிறுவயதிலேயே யானை பிடிக்க தொடங்கிவிட்டது. வளர்ந்த பின் யானையின் குணாதிசயம் என்னை மிகவும் வசீகரித்தது. எவ்வளவு கம்பீரமான உயரமும், எடையும். ஆனால் குணத்தில் சிறு குழந்தை. அடக்கமான புத்திசாலியான விலங்கு. ஆனால் சீண்டினால், மதம் பிடித்த யானையின் சீற்றத்தை அடக்க முடியாது. யானையின் நீண்ட தும்பிக்கை சொல்லும் சுவாச பாடம் உணர்ந்தால், மனிதரும் 120 வருடங்கள் வாழலாம்.ஆனால் வாழ்த்தல் என்பது இருத்தலை மட்டும் குறிக்கும் நிகழ்வு அல்ல. பல்லுயிர் இயைந்து வாழும் பூமியில் மற்ற ஜீவராசிகளுக்கும்  உள்ள உரிமையை மதித்து வாழ்ந்தால் மட்டுமே, மனித வாழ்வு நிலைக்கும்; சிறக்கும். பட்டம்பூச்சிகளின்  அழிவு கூட உணவு சங்கிலியின் ஒரு கண்ணியை தகர்த்து மானுட அழிவிற்கு வழிவகுக்கும்.அதனால் தான்  ஐன்ஸ்டீன் தேனீயின் அழிவு மானுட அழிவு என்று சொன்னார். மகரந்த சேர்க்கை செய்ய தேனீக்கள் இல்லாது போனால், காடு பெருகாது. காடுகள் இல்லையெனில் மழை பொழியாது. ய

பொங்கல்

பொங்கல் பண்டிக்கை பற்றி சங்க தமிழ் பாடல்களில் குறிப்பு உண்டா என்றால் இல்லை என்பதே மேலோட்டமான பதில். ஆனால் தை நீராடல் பற்றி பல பாடல்கள் உண்டு. பானையில் பொங்கி வரும் பொங்கல் பற்றிய உவமை  சீவக சிந்தாமணியில்  உண்டு. சிலப்பதிக்காரம் சதுக்க பூதத்திற்கு புழுக்கல் ( பொங்கல் ) படையல் போட்டது பற்றி சுட்டும். பிற்காலத்தில் ராஜேந்திர சோழன் காலத்தில் மகர சங்கராந்தியாக கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால் இது தமிழரின் உணர்வில் கலந்த பண்டிகை. மற்றோரு வகையில் யோசித்தால், இது பழங்குடிகளின் பண்டிகை. பரத கண்டத்தின் பழங்குடிகள் எல்லாம் வெவ்வெறு பெயரில் அறுவடை திருநாளை கொண்டாடுகின்றனர். பொங்கல் திருநாள் மானுடவியல் வளர்ச்சியை பறைசாற்றும் பண்டிகை. பொங்கலோ! பொங்கல்!.