Posts

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வரலாற்று பின்னணி

   இந்திய இராணுவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ட்ரிஞ்சர்   லாரன்ஸ் இங்கிலாந்திலிருந்து மெட்ராஸ் (இந்நாள் சென்னை) வந்து ஒரு தரமான படையை கம்பெனிக்காக உருவாக்கினார். 1757 வாக்கில் மெட்ராஸ் இராணுவம் கச்சிதமாக தயாராகி விட்டது. அதே வருடம் ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காளத்துக்கு அணிவகுத்து பிளாசி போரில் வெற்றிவாகை சூடியது. 1760ல் எயரி   கூட் தலைமையில் வந்தவாசியை கைப்பற்றியதோடு பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது.   அதன்பின்னர் நடந்த போர்களில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு அளப்பரியது. கம்பெனி அரசு இந்தியாவில் அசைக்க முடியாத அளவுக்கு காலூன்றியதில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு மிக அதிகம். முக்கியமாக தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமா இருந்த படைப்பிரிவுகளே, ஒழுக்கத்துக்கு பேர்போனதாகவும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும் இருந்ததாக மனஸ் தத்தா குறிப்பிடுகிறார் மதுரை பல்கலைக்கழகத்தில்   உதவி பேராசிரியராக பணியாற்றும்   ஜே பாலசுப்ரமணியன், மெட்ராஸ் இராணுவத்தில் சேருவது   பறையர்கள் சமூகத்தில் உயர உதவியதை சுட்டிக்காட்டுகிறார். தங்களை   அடிமைப்படுத்தி வைத்திருந்த சாதி விலங

பூரணை

சுற்றிலும் பசுமை போர்த்திய மலை குன்றங்கள் சூழ்ந்திருக்க உயர்ந்திருந்த அந்த மலைமுகட்டின் சதுர பீடத்தில் சிலையாய் நின்றிருந்த தேவியின் திருமுகத்தையே வெறிந்து பார்த்து கொண்டே இருந்தன சோழ இளவரசர் அருள்மொழியின் கண்கள். ஆம் அவர் இப்போது இளவரசர் தான். ஆனால் இளவரசருக்குரிய பகட்டுகளை துறந்து, தன் சிற்றப்பா மதுராந்தகருக்கு பட்டம் கட்டி விட்டு, சித்தாப்பாவிற்கு சோழ சிங்கதனத்தின் மீது உள்ள ஆசை அகலும் வரை, சோழ சிங்காதனத்தை மனதிலும் நினையேன்‌ என்று அரசபீடத்தை விட்டு விலகி வந்த இளவரசர். இப்போது அவர் அருள்மொழி தெரிஞ்ச கைக்கோளர் படையின் தலைவர் மட்டுமே.  அருள்மொழி மக்களோடு மக்களாக கலந்து பழக விரும்பினார். அதனால் சோழ நாட்டை கடந்தும், பல நாடுகளை சாதாரணனாக அலைந்து திரித்து காலார அந்த தேசங்களை கடந்து மண்ணோடு நேசம் பழகினார். அப்படி தான் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரை சேர்ந்த கூல வாணிபம் செய்யும் காடன்மைந்தனோடு சேர்ந்து மதுரைக்கு தென்மேற்கில் மலை நாட்டுக்கு செல்லும் பொதினி மலை தொடரில் உள்ள ஆரை நாடு வந்து சேர்ந்தார். இடையில் ஒரு யானையின் துரத்தலில் வணிக குழுவை பிரிந்து, இந்த மலை முகட்டில் ஏறும் படி ஆகிவிட்ட

என் பார்வையில் பொன்னியின் செல்வன் -1 திரைப்படம்

புகழ்ப்பெற்ற வர்ணனை மிகுந்த சரித்திர  நாவலை விறுவிறுப்பான திரைப்படம் ஆக்குவதும் , நாவலை படித்தவர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்வதும் இமாலய சாதனை தான். பொன்னியின் செல்வன் முதல் பகுதி அதை நிறைவேற்றி உள்ளதா என்றால், என்னை பொறுத்தவரை 70% நிறைவேற்றி உள்ளது என்பேன். முதலில் தொய்வாக நகரும் திரைப்படம் இடைவேளை நெருங்கும் போது வேகமெடுத்து, இரண்டாம் பகுதி ஒரு பரபரப்பான ஆக்‌ஷன் படமாக திரைக்கதை தீயின் வேகத்தில் பயனிகின்றது. நாவலை திரைக்கதைக்காக சில மாற்றங்கள் செய்துள்ளார் அதுவும் நன்றாக இருக்கின்றது வசனங்களை குறைத்து, பார்வைகளாலும், பின்னனி இசையாலுமே பல விஷயங்களை கடத்தி உள்ளது நன்றாக இருக்கின்றது. பிறகு என்ன 30% குறை என்கிறீர்களா? கல்கி பொன்னியின் செல்வனை கல்கி வராந்திர தொடராக எழுதியதாலும் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு ட்விஸ்ட்டுடன் முடிய வேண்டும் என்று non linier பாணியில் சொல்லி இருப்பார். சம்பவங்கள்  தொடர்பு இல்லாமல் தொக்கி நிற்கும் போது “ அவரே கதை சொல்லியாக “நம் கதாநாயகனை விட்டு விட்டு வந்து விட்டோம்” என்பது போல் தொடங்கி தொடர்பு படுத்திவிடுவார். இந்த யுத்தி தான் kgf படத்தில் பயன்படுத்தப்பட்டது.

ஆடி திருவாதிரையன்

சிறு வயதில் இருந்தே சோழர்கள் எனக்கு ஆதர்சமானவர்கள். பொன்னியின் செல்வன் நாவல் தான் என் சோழ பித்துக்கு விதை போட்டதோ என்று யோசித்தால், இல்லை என்பதே பதில். இந்த சோழ பித்துக்கான விதை என் தந்தை போட்டது. சோழ வரலாற்றில் என் தந்தையின் மனம் கவர்ந்தவர்கள் இருவர். ஒருவர் முதலாம் இராஜ இராஜ சோழனின் தமக்கையும் சோழர்களின் ஒப்புயர்வற்ற மாதரசியுமான குந்தவை பிராட்டி. அந்தப்புர பதுமைகளாக வலம்வந்த இளவரசிகள் மத்தியில், தம் புத்தி கூர்மையினால், தற்போதைய அரசு மருத்துவமனைகள் போல், இலவச சிகிச்சை வழங்கும் ஆதுல சாலைகளை சோழ மண்டலம் எங்கும் தமக்கு கிடைத்த சொத்துக்களை கொண்டு ஸ்தாபித்த அந்த மாதரசியின் அறிவாற்றலையும் , ஈகை குணத்தையும் எப்போதும் புகழ்ந்து பேசிக் கொண்டு இருப்பார் என் தந்தை. சோழ வரலாற்றில் என் தந்தையின்  மனங்கவர்ந்த இரண்டாவது நபர் இராஜேந்திர சோழன். வடக்கே கங்கை வரையிலும் கீழ்திசை நாடுகளில் பெரும்பாலான நாடுகளை ஒரு தமிழ் மன்னனாக கைப்பற்றிய  இராஜேந்திர சோழனின் படையெடுப்புகள் வெற்றிகள் பற்றிய பெருமித உணர்வு என் தந்தையிடம் எப்போதும் மிளிரும். ஒரு மன்னன் நாடு பிடிப்பது பெரிய விஷயமா? இதில் விதந்தோந்த என்ன இருக்

பொன்னியின் செல்வன்

மூவேந்தர்களில் மற்ற இரு வேந்தர்களை விட, தற்காலத்தில்  சோழர்களின்‌ வரலாறு,அதிகம் கொண்டாடுப்படுவதற்கு முக்கிய காரணம் பொன்னியின் செல்வன் தான். இதை யாரும் மறுக்க முடியாது. ஆனாலும், பாண்டியர்களையும் நாவல் தலைவராகளாக கொண்டு, தீபம் நா. பார்த்தசாரதியும், சாண்டியல்யனும் பல நாவல்கள் எழுதியுள்ளனர்.ஆனாலும் பொன்னியின் செல்வன் பெற்ற கவன ஈர்ப்பையும் , கொண்டாட்டத்தையும்  அந்த நாவல்கள் பெறவில்லை.   பொன்னியின் செல்வனின் மாபெரும் வெற்றிக்கு,கல்கியின் எழுத்து வன்மை காரணம் என்றாலும், அவர் எடுத்துக் கொண்ட கதைக்களமும் ஒரு முக்கிய காரணம். ஆயிரம் ஆண்டுகளையும் தாண்டிய நீண்ட நெடிய வரலாறு கொண்ட, சோழ பேரரசின் வரலாற்றில், ஒளி மிகுந்த, எழுச்சியான காலக்கட்டம் கிபி 950- 980 கிபி. இதை கல்கியே நாவலில் , சோழ சம்ராஜ்ஜியம் இப்போது ஆடி புனல் போல் பல்கி பெருகும் காலக்கட்டம் என்று சொல்லி இருப்பார். எழுச்சி என்று ஒரு இருந்தால், போட்டியும் பொறாமையும் சேர்ந்தே வளரும் .சோழ சம்ராஜ்ஜியம் வளர்ந்து கொண்டு இருந்தாலும், கிபி 949- கிபி 962 13 வருடங்களில், கண்டாராத்தித்தர், அரிஞ்சயர், சுந்தரசோழர் என மூன்று மன்னர்களை கண்டதும், சுந்தர சோழர

முதலாம் சடையவர்ம சுந்தர பாண்டியன்

இன்று சித்திரை மூலம் பிற்கால பாண்டியரில் புகழ்ப்பெற்ற முதலாம் சடையவர்ம சுந்தரபாண்டியனின்  ஜென்ம நட்சத்திரம். பொன்னியின் செல்வன் நாவலின் பிரமாண்டமான வெற்றிக்கு பிறகு, ராஜராஜ சோழரும், ராஜேந்திர சோழரும் கொண்டாடப்பட்ட அளவுக்கு வேறு தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படவில்லை.. ஆனால் இராஜேந்திர சோழருக்கு இனையாக தமிழக நிலப்பகுதிகள் தாண்டி, இன்றைய கேரளா, ஆந்திரா நெல்லூர் பகுதி, கர்நாடகாவின் கோலார் பகுதி, இலங்கை மற்றும் தாய்லந்து நாடு வரை கைப்பற்றி மிகப்பெரிய பிற்கால சாம்ராஜ்யத்தை கட்டி அமைந்தவர். ஆனால் இவரின் பிற்கால வாரிசுகள், பங்காளி சண்டையிட்டு, மாலிக் கபூரின் படையெடுப்பிற்கு காரணம் ஆனார்கள்.  ஆனால் இவர் அமைந்த ராஜப்பட்டையை சரியாக பயன்படுத்தி அமைந்தது தான் விஜயநகர சம்ராஜ்யம். பழுத்த சிவ பக்தரான இவர், சிவ ஆலயங்களுக்கு மட்டும் அல்ல வைணவ ஆலயங்கள் பலவற்றுக்கும் திருப்பணி செய்துள்ளார். திருவானைக்காவல் கோவில் மூலஸ்தான நுழைவு வாயிலில் உள்ள பாண்டியர் சின்னமாம், இரட்டை கயல் இன்னும் சுந்தரபாண்டிய மன்னரின் புகழைப் பாடிக்கொண்டே இருக்கிறது. ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இவர் செய்த திருப்பணிகள் பல. சிதம்பரம் கோவிலுக்கு ப

அவள் பெயர் கண்ணகி ..

சித்திரை மாத முழுநிலவு நாள் இரு தினங்களுக்கு முன் கழிந்தது. மங்கலதேவி கண்ணகி கோட்டத்தில் நடந்த விழா நிகழ்வுகளை சமூக வலைத்தளங்களில் பார்த்ததில் இருந்து மனதில் சுழற்று கொண்டு இருக்கின்றது கண்ணகி பற்றிய சிந்தனைகள். உலக பரம்பரிய தினமான இன்று தமிழ் சமூகத்தின் முக்கிய தொன்ம குறியீடான கண்ணகியை பற்றி எழுதுவதும் பொருத்தமான ஒன்று தான். காப்பிய நாயகி அவள்; வெறும் கற்பனை பாத்திரம், என கடந்து போய் விட முடியாது கண்ணகியை. அவள் இரத்தமும் சதையுமாக இம்மண்ணில் வாழ்ந்து மறைந்த பெண் மலர். இதற்கு மானுடவியல் சான்று பல உண்டு. கோவலனை கைப்பிடித்த போது அவள் பால்யம் மாறா குழந்தை தான். கண்ணகியை முதிராக் குளவியள் என்று சிலம்பு குறிப்பிடுக்கின்றது. கிள்ளை பருவத்திலேயே மணமுடித்து கொடுக்கப்பட்டு, இனி உன் வாழ்வு என்பது உன் பதியை சார்ந்தது என கணவனை மட்டுமே சார்ந்து தன் வாழ்வை துவங்கிய பேதை அவள். மாதவி என்னும் அழகி மீது மையல் கொண்டு கோவலன் கண்ணகியை பிரிய, வாழ்வு இருண்டு தான் போனது கண்ணகிக்கு. இருண்ட வாழ்வில் மீண்டும் முளைத்த வெள்ளியாக, செல்வம் கரைந்த பின்னும் மீண்டு வந்த செல்வமாக கணவன் திரும்பி வர, நல்ல எதிர்காலத்தை எதிர