Posts

Showing posts from May, 2021

சிந்தனையில் உதித்தவை

நெருப்புக்கு ஏதடா சுத்தம் அசுத்தம்? இது எழுத்தாளர் ஜெயமோகன் நான் கடவுள் படத்துக்கு எழுதின வசனம். நெருப்பை எதுவும் அசுத்தப்படுத்த முடியாது. ஏன் என்று யோசித்து‌ இருக்கின்றீர்களா? நெருப்பில் உயிரினம் வாழாது. உயிரின் டி.என்.ஏ , ஆர்.என்.ஏ உள்ள புரதங்களே நினைவுகளை கடத்துக்கின்றன. உயிர்கள் இல்லாத இடத்தில் நினைவுகள் இல்லை.நினைவுகள் இல்லாத இடத்தில் நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்னும் பேதம் இல்லை. எனவே நெருப்பு அசுத்தப்படுவதில்லை. நெருப்பு போன்ற நிலையை மனம் அடங்கியவர் அடையலாம். ஆனால் களிறு போல் துள்ளும் மனத்தை அடங்கி ஆள்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவரும் நெருப்பும் வேறில்லை.

கார்ல்மார்க்ஸ் பிறந்தநாள்

இன்று காரல் மார்க்ஸின் 203 வது பிறந்தநாள். அவரின் மூலதனம் ( Das  Capital) என்ற நூலை படிக்காமல், இளங்கலைப் பொருளாதார படிப்பை நிறைவு செய்ய முடியாது. மூலத்தனம் என்பது தொழிலுக்கான முதல், கருவிகள் ஆகிய சேமிப்பு குவியல் என முதலாளித்துவ வல்லுநர்கள் வரையறுத்த போது, " மூலதனம் என்பது வரலாற்று ரீதியான இனம் " என்ற புதிய விளக்கம் அளித்தவர் காரல் மார்க்ஸ். உழைப்பு சக்தி ஓரு பண்டமாக மாறும் போது, உற்பத்தி சாதனங்களை கொண்ட முதலாளியும், உழைப்பை தவிர வேறு எதுவுமே உடைமையாக இல்லாத கூலி தொழிலாளியும் சமூகத்தின் முக்கிய நபர்களாக இருக்கும் போது மட்டுமே மூலதனம் தோன்றுகின்றது என மார்க்ஸ் எடுத்துக் காட்டினார். முதலாளித்துவம் வேறோடி போன 19  ஆம் நூற்றாண்டின் ஐரோப்பாவில் தொழிலாளரின் குரலை ஓங்கி ஒலித்தது காரல் மார்க்ஸின் குரல். மார்க்ஸின் குரலுக்கு வலு சேர்த்தது அவரின் நன்பர் ஏங்கல்ஸின் கரம். மரணம் தாண்டியும் தன் நன்பருக்கு துணையாக நின்றார் ஏங்கல்ஸ். மார்க்ஸ் மரணத்திற்கு பின் இறுதி காரியங்கள் செய்த பிறகு, அவரின் இரு மகள்களுக்கு தன் சொத்துக்களை உயில் எழுதி வைத்தார். மார்க்ஸை நினைக்கும் போது ஜென்னியை நினைக்காம

சுஜாதா

இன்று எழுத்தாளர் சுஜாதா பிறந்தநாள்.இவருடைய, இயற்பெயர் ரங்கராஜன். "இடது ஓரத்தில்" என்ற இவருடைய சிறுகதை 1962 ஆம் ஆண்டு குமுதம் இதழில் ரங்கராஜன் என்ற பெயரில் வெளிவந்தது. குமுதம் ரா. கி. ரங்கராஜனின் பெயரும் இவர் பெயரும் குழப்பிக் கொள்ளப்பட்டதால் தன் மனைவி பெயரான, 'சுஜாதா'வைத், தன் புனைபெயராக வைத்துக் கொண்டார். கணையாழி இதழில் கடைசிப் பக்கங்கள் எனும் கட்டுரைத் தொடரை ஸ்ரீரங்கம் எஸ். ஆர் எனும் பெயரிலும் எழுதி வந்தார்.  சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, கட்டுரை, தொலைக்காட்சி, இணையம், திரைப்படம் என்று கால் பதித்த அனைத்துத் துறைகளிலும் தனது அழுத்தமான, தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் சுஜாதா (1935-2008). ஆண்டாள் முதல் அறிவியல் வரை எதையும் புதுமையாகவும் வசீகரிக்கக்கூடிய வகையிலும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றவை இவருடைய எழுத்துகள். சுஜாதாவின் விரிவான வாசிப்பும் அதற்கு ஒரு வகையில் காரணம்.   சுஜாதா சொல்லின் செல்வர்.‌ தொழில்முறை எழுத்தாளர் இல்லை அவர். அடிப்படையில் அவர் பொறியாளர். ஆனாலும் தம் மனதிருப்திக்காக, நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதி இருக்கின்றார். மனத்தின் குரல் வார்த்தைக