சிந்தனையில் உதித்தவை
நெருப்புக்கு ஏதடா சுத்தம் அசுத்தம்? இது எழுத்தாளர் ஜெயமோகன் நான் கடவுள் படத்துக்கு எழுதின வசனம். நெருப்பை எதுவும் அசுத்தப்படுத்த முடியாது. ஏன் என்று யோசித்து இருக்கின்றீர்களா? நெருப்பில் உயிரினம் வாழாது. உயிரின் டி.என்.ஏ , ஆர்.என்.ஏ உள்ள புரதங்களே நினைவுகளை கடத்துக்கின்றன. உயிர்கள் இல்லாத இடத்தில் நினைவுகள் இல்லை.நினைவுகள் இல்லாத இடத்தில் நேர்மறை எதிர்மறை எண்ணங்கள் என்னும் பேதம் இல்லை. எனவே நெருப்பு அசுத்தப்படுவதில்லை. நெருப்பு போன்ற நிலையை மனம் அடங்கியவர் அடையலாம். ஆனால் களிறு போல் துள்ளும் மனத்தை அடங்கி ஆள்வது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. வாய்த்தவரும் நெருப்பும் வேறில்லை.