Posts

Showing posts from July, 2020

காதல் ஒளி

கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந்தது. லட்சக்கணக்கான வீரர்கள், சொந்தங்களை விரைவில் காண போகின்றோம் என மகிழ்ச்சி பெருக்குடன் தரை இறங்கி கொண்டு இருந்தார்கள். வீரர்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கை கொண்டு பார்க்கும் போது தரை இறங்கவே ஒரு பொழுது கடந்து விடும் போல் இருந்தது. இதை எல்லாம் பெரிய மரகலத்தின் விளிப்பில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மாமன்னர் ராஜேந்திர சோழர். 60 வயது கடந்தாலும் உடம்பின் தசைகள் இறுகி, வாலிப முறுக்கொடு தான் இருந்தார். கடற்கரை காற்று அவரது வெள்ளி முடிகளை அசைத்து சென்றது. மறைந்து கொண்டு இருக்கும் கதிரவனின் பொன்னொளியில் மன்னரின் தோற்றம் அழகாக இருந்தது. மன்னரின் எகாந்தத்தை கலைக்கும் வகையில் மேல் தளத்திற்கு யாரோ படி ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். ஓ! ராஜேந்திர சோழரின் தளபதி அருள்மொழி.60 வயது மதிக்கலாம். “ வா! அருள்மொழி! தரையிறங்க ஏற்பாடு ஆகிவிட்டதா?” “ ஆகி விட்டது அரசே! தங்களை பூரண கும்ப மரியாதையோடு அழைத்து செல்ல, அனைத்தும் தயாராகி விட்டது. ப

கிளிஞ்சல் கூடு

வித விதமான  யாத்ரீகர்கள் அலையும் ராமேஸ்வரம் தீவு. கோவிலுக்கு எதிரில் கடல் அக்னி தீர்த்தமாக விரிந்து இருந்தது. அன்று தை அம்மாவசை கூட்டம் அதிகம் இருந்தது. ராமேஸ்வரம் தீவின்  ஒரு கரையில் டீசல் படகுகளும், வள்ளங்களும், கட்டுமரங்களும் நிறைந்து கிடந்த மீனவ குப்பத்தின் ஒரு குடிசையில் தான் அவன் கண்மூடி படுத்து இருந்தான். அவன் பெயர் அய்யனார். கடலாடும் மீனவன். நீண்ட கடற்கரை கொண்ட இந்திய தீபகற்பத்தின் கடற்கரை நெடுக நிறைந்த , ஆனால் சமவெளி மக்களால் அதிகம் கண்டு கொள்ளப்படாத மீனவ கூட்டத்தில் அய்யனாரும் ஒருவன்.  ஓலை குடிசையின் இடுக்குகளில் புகுந்து, மதிய கதிரவன் கண்களை கூச செய்தான். இன்னும் தூக்கம் கண்களில் மிச்சம் இருந்தது அய்யனருக்கு. ஆனாலும் உறங்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தான். புழக்கடையில் அவன் தாய், காட்டாரி பத்து தேய்த்து கொண்டு இருந்தாள். முகங்கழுவி கொண்டு வந்து, சோறு எடுத்து வை ஆத்தா என குரல் கொடுத்தான். “ இன்னிக்கு கப்பா சோறு தான் டா. ரேசன் அரிசி வடிச்ச தான் உனக்கு ஆகாது. கடை அரிசி வாங்க தான் சரியா பாடு இல்லியே,பொங்க வேற வருது. உன் அய்த  வேற போன் அடிச்சு, ஊருக்கு வாங்க மதினினா , என்ன ச