ஆலிலை
பத்திரன்கோட்டை, தென்காசி அருகே உள்ள சிறிய ஊர். ஊரே தேர்தல் பரப்பரப்பிலும், கொரானா இரண்டாவது அலையின் பரப்பப்பிலும் இருக்க, தன் உலகத்துக்கும் அதற்கும் சம்பந்த இல்லை என்பது போல், அந்த ஊரின் வடபுறத்தில் அமைந்திருந்த ஆபத்து காத்த அம்மன் கோவிலின் சப்த மாத சன்னிதியை வெறித்து பார்த்தப்படி அமர்ந்து இருந்தாள் ஸ்ரீஜா. ஸ்ரீஜா ஒரு தமிழ் தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியின் க்ரியேட்வ் ஹெட். அவளுக்கு சிறுவயதிலேயே அமானுஷ்யம், வரலாற்றில் ஆர்வம் அதிகம். அந்த ஆர்வத்துடன் அவள் கற்பனை திறனும் இனைய 25 வயதிலேயே பிரபல தொலைக்காட்சியின் ப்ரைம் ஸ்லாட் நிகழ்ச்சியின் க்ரியேட்வ் ஹெட் ஆக முடிந்தது.அவள் தென்காசி வந்தது, வாரம் ஒரு அமானுஷ்யம் என்ற நிகழ்ச்சிக்காக. தென்காசி மலையடிவாரத்தில் குடில் அமைத்து, கூடு விட்டு கூடு பாயும் விந்தையான பரகாய ப்ரவேசத்தில் இருந்து அஷ்டமா சித்து வரை தன்னால் செய்ய முடியும், கொரானாவிற்கு மருந்து இமயமலையில் உள்ளது, அதை தன்னால் கண்டறிய முடியும் என உதார்விட்ட ஒரு சாமியாரை பேட்டி எடுக்க. பேட்டியெல்லாம் எடுத்து முடித்து, அவள் ஊருக்கு கிளம்பும் நேரத்த...