Posts

Showing posts from 2025

Dude என் பார்வை..

Dude .. படம் பார்த்தேன். பலருக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு படம் பிடித்திருந்தது. படத்தின் முக்கிய கருத்தாக்கம் ஆக நான் கருதுவது, உங்கள் கவுரவத்தை கட்டமைக்கவும், உங்கள் உரிமையை நிலைநாட்டவும், பெண் உடமையல்ல. தனக்கான வாழ்வை தேர்தேடுக்க  உரிமை உள்ள மனுஷி.  அப்போ தாலி சென்டிமென்ட்? கலாச்சார சீரழிவு என்ற விமர்சனங்களுக்கு என் பதில்.. விருப்பமில்லாமல் கட்டப்படும் கயிறுக்கு  எந்த மதிப்பும் இல்லை. களவும் கற்பும் தமிழர் நாகரிகம். ஒருவரை ஒருவர் விரும்பி, ஊரறிய  இன்னாரின் மனைவி என்று அறிவித்து கட்டப்படும் கயிற்றை கட்டியவனை அந்த பெண் ஏற்றால் தான் அந்த கயிற்றுக்கு மதிப்பு. இதை தான் கண்ணகி அனைத்தும் இழந்து வந்த கோவலனிடம் "போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா  உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்று எழுந்தனன் யான்” என கூறினாள்-" யாராலும் மாற்ற முடியாத அன்பை உம் மீது வைத்திருந்தவள் என்ற காரணத்தால் நான் நீர் கூப்பிட்ட உடனே எல்லோரையும் விட்டு உம்மோடு புறப்பட்டு வந்துவிட்டேன் என்று  கூறுகின்றாள். அதாவது நீ கூப்பிட்டதால்  வரவில்லை, நான் விரும்பியதால்,...

காதல் தீபம்

கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந்தது. லட்சக்கணக்கான வீரர்கள், சொந்தங்களை விரைவில் காண போகின்றோம் என மகிழ்ச்சி பெருக்குடன் தரை இறங்கி கொண்டு இருந்தார்கள். வீரர்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கை கொண்டு பார்க்கும் போது தரை இறங்கவே ஒரு பொழுது கடந்து விடும் போல் இருந்தது. இதை எல்லாம் பெரிய மரகலத்தின் விளிப்பில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மாமன்னர் ராஜேந்திர சோழர். 50 வயது கடந்தாலும் உடம்பின் தசைகள் இறுகி, வாலிப முறுக்கொடு தான் இருந்தார். கடற்கரை காற்று அவரது வெள்ளி முடிகளை அசைத்து சென்றது. மறைந்து கொண்டு இருக்கும் கதிரவனின் பொன்னொளியில் மன்னரின் தோற்றம் அழகாக இருந்தது. மன்னரின் எகாந்தத்தை கலைக்கும் வகையில் மேல் தளத்திற்கு யாரோ படி ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். ஓ! ராஜேந்திர சோழரின் தளபதி அருள்மொழி.50 வயது மதிக்கலாம். “ வா! அருள்மொழி! தரையிறங்க ஏற்பாடு ஆகிவிட்டதா?” “ ஆகி விட்டது அரசே! தங்களை பூரண கும்ப மரியாதையோடு அழைத்து செல்ல, அனைத்தும் தயாராகி விட்டது. புறப...