Posts

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி2)

ரவிதாசன் யார் என்று அறிந்து கொள்வதற்கு, அருண்மொழி என்னும் இயற்பெயர் கொண்ட ராஜ ராஜ சோழரின்  முதல் யுத்தம் பற்றி அறிவது அவசியம். இராஜராஜனின் மெய்கீர்த்தியின் படி அவரது முதல் போர் நிகழ்வு காந்தளூர் சாலை கலம் மறுத்த நிகழ்வு ஆகும். ஒரு நுற்றாண்டு போர் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும், காந்தளூர் சாலைப் போர் பற்றி இப்போது காண்போம். காந்தளூர்ச் சாலைப் போர், சோழப் பேரரசன் ராஜராஜ சோழன் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு மேற்கொண்ட மிக முக்கியமான போர். கி.பி. 10ஆம் நூற்றாண்டில் நடந்த இந்தப் போர், முதலாம் ராஜராஜனுக்கும் சேர மன்னன் முதலாம் பாஸ்கர ரவி வர்மனுக்கும் இடையில் நடந்தது. காந்தளூர்ச் சாலை காந்தளூர்ச் சாலை என்பது இன்றைய கேரள மாநிலத்தில் திருவனந்தபுரத்துக்கு அருகில் வலிய சாலா என்னும் இடம் என ஆய்ந்தறியப்பட்டுள்ளது. இந்த இடம் முற்காலத்தில் ஒரு கல்விக்கூடமாக இருந்தது. இங்குப் பயிற்சி பெற்ற வீரர்கள் போர்த் திறன் மட்டுமல்லாது புத்திக்கூர்மையிலும் சிறந்து விளங்கியுள்ளனர். போர்க் கலைகள் மட்டுமின்றி போர் நுட்பங்களும், வியூகங்களும் கற்பிக்கப்பட்டு வந்துள்ளன. தனுர்வேதம் எனப்படும் வில்...

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு

ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்? தமிழக வரலாற்றில் ஒரு அழியாத கறையை அளித்துச் சென்றுவிட்ட நிகழ்வு ஆதித்த கரிகாலன் கொலை. தமிழக வரலாற்றில் அதற்கு முன் முற்காலச் சோழர்களில் கரிகாலனின் தந்தையான இளஞ்சேட்சென்னியும் கொலை செய்யப்பட்டதாக சங்க காலப் பாடல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் ஆதித்த கரிகாலன் கொலையைப் போன்ற நிகழ்வாக அது அமையவில்லை. இந்த நிகழ்வு இத்துணை பிரபலமானதற்கு மற்றுமொரு முக்கிய காரணம் கல்கியின் பொன்னியின் செல்வன் என்று கூறலாம். ஆதித்த கரிகாலன்  சோழரது புகழ் பெற்ற மன்னருள் ஒருவனான முதலாம்  இராஜராஜனின்  தமையனும்  சுந்தர சோழரின்  மகனுமாவான். ஆதித்தன் சிறுவனாய் இருந்த பொழுதே  சிங்கம்   யானையுடம் போரிடுவதைப் போல், பாண்டிய நாட்டில் சோழர்களின் செல்வாக்கை நிலைநாட்ட செய்த கண்டராதித்தனின் முயற்சிகளைத் தகர்த்து தன்னுரிமையுடன் வாழ்ந்து வந்த  வீரபாண்டியனுடன்  போரிட்டதாக லெய்டன் பட்டயங்கள் புகழ்கின்றன.  புதுக்கோட்டையின்  தென் எல்லையில் உள்ள, சேவலி மலைகளுக்குத் தெற்கேயுள்ள, சேவூர்ப்போர்க்களத்தில் ஆதித்த கரிகாலனது வீரம் வெளிப்பட்டதோடு,  வீரப...