Posts

Dude என் பார்வை..

Dude .. படம் பார்த்தேன். பலருக்கும் எதிர்மறையான விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் எனக்கு படம் பிடித்திருந்தது. படத்தின் முக்கிய கருத்தாக்கம் ஆக நான் கருதுவது, உங்கள் கவுரவத்தை கட்டமைக்கவும், உங்கள் உரிமையை நிலைநாட்டவும், பெண் உடமையல்ல. தனக்கான வாழ்வை தேர்தேடுக்க  உரிமை உள்ள மனுஷி.  அப்போ தாலி சென்டிமென்ட்? கலாச்சார சீரழிவு என்ற விமர்சனங்களுக்கு என் பதில்.. விருப்பமில்லாமல் கட்டப்படும் கயிறுக்கு  எந்த மதிப்பும் இல்லை. களவும் கற்பும் தமிழர் நாகரிகம். ஒருவரை ஒருவர் விரும்பி, ஊரறிய  இன்னாரின் மனைவி என்று அறிவித்து கட்டப்படும் கயிற்றை கட்டியவனை அந்த பெண் ஏற்றால் தான் அந்த கயிற்றுக்கு மதிப்பு. இதை தான் கண்ணகி அனைத்தும் இழந்து வந்த கோவலனிடம் "போற்றா ஒழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா  உள்ள வாழ்க்கையேன் ஆதலின் ஏற்று எழுந்தனன் யான்” என கூறினாள்-" யாராலும் மாற்ற முடியாத அன்பை உம் மீது வைத்திருந்தவள் என்ற காரணத்தால் நான் நீர் கூப்பிட்ட உடனே எல்லோரையும் விட்டு உம்மோடு புறப்பட்டு வந்துவிட்டேன் என்று  கூறுகின்றாள். அதாவது நீ கூப்பிட்டதால்  வரவில்லை, நான் விரும்பியதால்,...

காதல் தீபம்

கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந்தது. லட்சக்கணக்கான வீரர்கள், சொந்தங்களை விரைவில் காண போகின்றோம் என மகிழ்ச்சி பெருக்குடன் தரை இறங்கி கொண்டு இருந்தார்கள். வீரர்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கை கொண்டு பார்க்கும் போது தரை இறங்கவே ஒரு பொழுது கடந்து விடும் போல் இருந்தது. இதை எல்லாம் பெரிய மரகலத்தின் விளிப்பில் இருந்து பார்த்து கொண்டு இருந்தார் மாமன்னர் ராஜேந்திர சோழர். 50 வயது கடந்தாலும் உடம்பின் தசைகள் இறுகி, வாலிப முறுக்கொடு தான் இருந்தார். கடற்கரை காற்று அவரது வெள்ளி முடிகளை அசைத்து சென்றது. மறைந்து கொண்டு இருக்கும் கதிரவனின் பொன்னொளியில் மன்னரின் தோற்றம் அழகாக இருந்தது. மன்னரின் எகாந்தத்தை கலைக்கும் வகையில் மேல் தளத்திற்கு யாரோ படி ஏறி வந்து கொண்டு இருந்தார்கள். ஓ! ராஜேந்திர சோழரின் தளபதி அருள்மொழி.50 வயது மதிக்கலாம். “ வா! அருள்மொழி! தரையிறங்க ஏற்பாடு ஆகிவிட்டதா?” “ ஆகி விட்டது அரசே! தங்களை பூரண கும்ப மரியாதையோடு அழைத்து செல்ல, அனைத்தும் தயாராகி விட்டது. புறப...

ஜோகிமாரா

அது கிறிஸ்து பிறப்பதற்கும், மூன்று நூற்றாண்டுகள் முற்பட்ட காலம். அடர்ந்த வனப்பகுதியான தண்டகரண்யம் ( தற்போதைய சட்டிஸ்கரில் உள்ள வனம்), சலசலத்து பெய்யும் பருவ கால ம...

கேப்டன் மில்லர் திரைப்படத்தின் வரலாற்று பின்னணி

   இந்திய இராணுவத்தின் தந்தை என்றழைக்கப்படும் ஸ்ட்ரிஞ்சர்   லாரன்ஸ் இங்கிலாந்திலிருந்து மெட்ராஸ் (இந்நாள் சென்னை) வந்து ஒரு தரமான படையை கம்பெனிக்காக உருவாக்கினார். 1757 வாக்கில் மெட்ராஸ் இராணுவம் கச்சிதமாக தயாராகி விட்டது. அதே வருடம் ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காளத்துக்கு அணிவகுத்து பிளாசி போரில் வெற்றிவாகை சூடியது. 1760ல் எயரி   கூட் தலைமையில் வந்தவாசியை கைப்பற்றியதோடு பிரெஞ்சுக்காரர்களின் நாடு பிடிக்கும் ஆசைக்கு ஒரு முற்று புள்ளி வைத்தது.   அதன்பின்னர் நடந்த போர்களில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு அளப்பரியது. கம்பெனி அரசு இந்தியாவில் அசைக்க முடியாத அளவுக்கு காலூன்றியதில் மெட்ராஸ் இராணுவத்தின் பங்கு மிக அதிகம். முக்கியமாக தாழ்த்தப்பட்டவர்கள் அதிகமா இருந்த படைப்பிரிவுகளே, ஒழுக்கத்துக்கு பேர்போனதாகவும் உத்தரவுக்கு கட்டுப்படுவதாகவும் இருந்ததாக மனஸ் தத்தா குறிப்பிடுகிறார் மதுரை பல்கலைக்கழகத்தில்   உதவி பேராசிரியராக பணியாற்றும்   ஜே பாலசுப்ரமணியன், மெட்ராஸ் இராணுவத்தில் சேருவது   பறையர்கள் சமூகத்தில் உயர உதவியதை சுட்டிக்காட்டுகிறார். தங்களை...

பூரணை

சுற்றிலும் பசுமை போர்த்திய மலை குன்றங்கள் சூழ்ந்திருக்க உயர்ந்திருந்த அந்த மலைமுகட்டின் சதுர பீடத்தில் சிலையாய் நின்றிருந்த தேவியின் திருமுகத்தையே வெறிந்து பார்த்து கொண்டே இருந்தன சோழ இளவரசர் அருள்மொழியின் கண்கள். ஆம் அவர் இப்போது இளவரசர் தான். ஆனால் இளவரசருக்குரிய பகட்டுகளை துறந்து, தன் சிற்றப்பா மதுராந்தகருக்கு பட்டம் கட்டி விட்டு, சித்தாப்பாவிற்கு சோழ சிங்கதனத்தின் மீது உள்ள ஆசை அகலும் வரை, சோழ சிங்காதனத்தை மனதிலும் நினையேன்‌ என்று அரசபீடத்தை விட்டு விலகி வந்த இளவரசர். இப்போது அவர் அருள்மொழி தெரிஞ்ச கைக்கோளர் படையின் தலைவர் மட்டுமே.  அருள்மொழி மக்களோடு மக்களாக கலந்து பழக விரும்பினார். அதனால் சோழ நாட்டை கடந்தும், பல நாடுகளை சாதாரணனாக அலைந்து திரித்து காலார அந்த தேசங்களை கடந்து மண்ணோடு நேசம் பழகினார். அப்படி தான் காஞ்சிபுரத்தை அடுத்த களக்காட்டூரை சேர்ந்த கூல வாணிபம் செய்யும் காடன்மைந்தனோடு சேர்ந்து மதுரைக்கு தென்மேற்கில் மலை நாட்டுக்கு செல்லும் பொதினி மலை தொடரில் உள்ள ஆரை நாடு வந்து சேர்ந்தார். இடையில் ஒரு யானையின் துரத்தலில் வணிக குழுவை பிரிந்து, இந்த மலை முகட்டில் ஏறும் படி ஆகிவ...