Posts

Showing posts from 2020

ரங்காநதி

மூச்சு மூட்ட வைக்கும் வாழ்க்கையின் ஓட்டத்தில் நான் சரண் அடைவது ரங்காநதியிடம். கரையில் வந்து நிற்கும் என் முகத்தை, தன் நீர் பூசிய குளிர் காற்றின் கரத்தால் துடைத்துக் கொண்டே, இதற்கே அலறினால் என்ன செய்வது? இருளும் ஓளியும் மோதிக் கொள்ளும் பிரபஞ்சத்தின் ஆட்டத்தின் முன் இந்த வாழ்க்கையின் ஆட்டம் எல்லாம் சிறுப்பிள்ளை விளையாட்டு பேதை பெண்ணே என்று தன் நீர் சுழல்களை சுழற்றிக் கொண்டே ஓடிக்கொண்டு இருக்கின்றது ரங்கா நதி. அந்த சுழற்சிக்குள் எனது எண்ணங்கள் கரைந்து போக, மெய்மறந்து ரங்கா நதிக்கரையில் நிற்கின்றேன் தாயின் சேலை நுனி பிடித்து நிற்கும் சிறு கிள்ளை போல.❤️❤️ #ரங்காநதி

ஐப்பசி சதய விழா

 இன்று‌ ஐப்பசி சதய விழா.. எனக்கு சிறுவயத்தில் இருந்தே சரித்திரம் மிகவும் பிடிக்கும். கடந்த தலைமுறையின் அனுபவம் வரும் தலைமுறைக்கு பாடம் என நம்புகின்றேன்.  சரித்திர பக்கங்களில் என்னை மிகவும் கவர்ந்த மன்னர் ராஜராஜ சோழன் . நிர்வாகதிறனும் ஆளுமையும், பெருந்தன்மையும் இறை உணர்வும் இறை தேடலும் கொண்ட மன்னன் ராஜராஜர். ஆட்சி பீடம் ஏற சொந்த சகோதரர்களை பலி கொடுத்த  மன்னர்கள் சரித்திரத்தில் உண்டு. ஆனால் நாடு நகரம் மக்கள் அனைவரும் முடி சூட்டி கொள்ள வற்புறுத்தி இளமையில் ஆட்சி பீடத்தை கையில் கொடுத்தும், தன் ஒன்று விட்ட சித்தப்பாவிற்கு ஆட்சி மீது ஆசை என்பதால் விட்டு கொடுத்து அவர் காலத்திற்கு பின் 15 ஆண்டுகள் கழித்து தன் மத்திய வயதில் தான் சோழ அரசாட்சியை ஏற்றுக் கொண்டார் என திருவாலங்காடு செப்பெடுகள் கூறுகின்றன. அடுத்து பழம்பெருமை பேசாமல் செயல்திறனை காட்டியது. முதலாம் ராஜராஜர் வரை சோழ மன்னர்கள் கல்வெட்டு சூரிய குல தோன்றல் என் அரம்பித்து மனுநீதி சோழன் சிபி சக்கரவர்த்தி, கரிகால் சோழன் என முற்கால சோழரின் பெருமை பேசி தான் ஆரம்பிக்கும் . அதில் முக்கால்வாசி புராண கதை கலந்து இருக்கும். ராஜ ராஜர் தான...

ஆடி திருநாள்

இன்று ஆடி 18 காவிரிக்கரை களை கட்டும். தென் தமிழக மக்கள் ஆடி 18 ஐ அவ்வளவாக கண்டு கொள்ள மாட்டார்கள். ஆனால் வடக்கே ஆடி 18 திருவிழா தான். அதுவும் காவிரி தன் கடல் காதலனை நெருங்கி ...

காதல் ஒளி

கடாரமும் முந்நீர் பழந்தீவும் வெற்றி கொண்டு, கீழை கடல் பிராந்தியம் முழுவதும் வெற்றி கொண்ட சோழர் படை பெரும் ஆராவரத்துடன் நாகை துறைமுகத்தில் தரை இறங்கி கொண்டு இருந...

கிளிஞ்சல் கூடு

வித விதமான  யாத்ரீகர்கள் அலையும் ராமேஸ்வரம் தீவு. கோவிலுக்கு எதிரில் கடல் அக்னி தீர்த்தமாக விரிந்து இருந்தது. அன்று தை அம்மாவசை கூட்டம் அதிகம் இருந்தது. ராமேஸ்வர...