பெண் என்னும் பராசக்தி

வேதாந்தம் அடிப்படையில் எல்லாமே ஜீவாத்மா என்னும் போது ஆண் என்ன? பெண் என்ன? எல்லாமே ஒளியின் துளி அல்லவா என்று தோன்றினாலும் உடல் கூறு அடிப்படையில் உடலின் ஆறு சக்கரங்களை தூண்டி விடுவது ஒரு பெண்ணிற்கு கடினம் தான். ஆனால், ஹடயோகத்தின் மூலம் இதை பெண்ணை விட ஆண் , எளிதாகவே செய்ய முடியும். மூலாதார சக்கரத்தை உச்சியில் நிறுத்தி, சகஸ்கரஹாரத்தில் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்வதே யோக நிலை. இது பெண்ணுக்கு எளிதல்ல. ஏன்? இந்த பராபட்சம் என எண்னும் போது எனக்குள் தோன்றிய விடை பெண் படைப்பின் மூலம். கருப்பை என்னும் இருளின் சக்தி அவள். இருளில் இருந்தே ஒளி தோன்றுவதால் அவளுக்கு யோகநிலையின் சகஸ்கரஹார பிரகாசம் தேவை இல்லை. என்னெனில் எல்லா பிரகாசத்தின் ஒளிப்புள்ளியும் காரிருளில் தோன்றுபவையே.

Comments

Popular posts from this blog

அப்பம் வடை தயிர்சாதம்

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு ( பகுதி4)

ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு